Tuesday, February 04, 2014

விநாயகர் புகைப்படம்

இயற்கைகாட்சி புகைப்படம்

புன்னகை தேசம்

எவ்வளவு சிந்தினாலும்
தீர்வதில்லை
அள்ளக்குறையாத புன்னகை

மொட்டாகவேயிருந்து
நீ பார்த்தபின்பே
மலர்கின்றன இதழ்கள்

நான் அதிகம் அணிந்திடாத
புன்னகையை அணிவித்து
அழகு பார்ப்பது நீ

என் புன்னகையின் மதிப்பு
உயர்ந்துகொண்டேயிருக்கும்
உன்னிடத்தில் மட்டும்

உனக்கு நகைச்சுவையுணர்வு அதிகமாம்
சுவைக்கக்கூடுமென்ற காத்திருப்பில்
புன்னகை இதழ்கள்

Gauthaman DS Karisalkulaththaan