Friday, February 15, 2013

ஜலதோஷம் போக்கும் தும்பை!

 

 

 

 

 


இந்தகுளிர்காலத்தில்பலரும்ஜலதோஷம், சளியால்அவதிப்பட்டுவருகிறார்கள்.அதற்கு அருமருந்தாகத்திகழக்கூடியதுதும்பை. கிராமப்புறங்களில்சர்வசாதாரணமாகக் காணப்படும்தும்பை,எளிதாகக்கிடைக்கக்கூடியது.

பச்சைபசேல்நிறத்தில்,கத்திபோல்நாலாபுறமும் நீட்டிக் கொண்டிருக்கும். முழுத் தாவரமுமே மருத்துவக் குணம் கொண்டது என்றாலும், இலையும், பூக்களும் மருத்துவ குணம் அதிகமுள்ளவை. தும்பையின் சில மருத்துவ மகத்துவங்களைப் பார்க்கலாம்...

சளியைப் போக்க..... உடம்பில் கப மாற்றத்தால் ஏற்படும் நோய்களைப் போக்கும் அருமருந்தாகும் தும்பை. சளி பிடிப்பதால் நோய்களின் தாக்கம் அதிகரிக்கும். அடிக்கடி சளித் தொல்லையால் அவதிப்படுபவர்கள் தும்பை இலையின் சாறில் தேன் கலந்து அருந்தினால் சளித் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

ஜலதோஷம்....... 20 தும்பைப் பூக்களைப் போட்டுக் காய்ச்சி தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் ஜலதோஷம், தலைப் பாரம், சிறுரோகம் சம்பந்தப்பட்ட அனைத்தும் தீரும். மலச்சிக்கல்...... மலச்சிக்கல் இருப்பதுதான் நோயின் அறிகுறி. தற்காலத்தில் வேதிப் பொருட்கள் கலந்த உணவுகளை உண்பதாலும், அதிக மன அழுத்தத்தாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. தும்பை இலையை நன்கு அலசி அதனுடன் புதினா, கொத்தமல்லி கலந்து வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.

வாயுத்தொல்லை..... வாயுவை அதிகரிக்கும் உணவுப்பொருட்களை உண்பதால் ஏற்படும் தொல்லையில் இருந்து விடுபட தும்பை இலையின் சாறைத் தொடர்ந்து மூன்று நாட்கள்ந்தக் குளிர் காலத்தில் பலரும் ஜலதோஷம், சளியால் அவதிப்பட்டு வருகிறார்கள். அதற்கு அருமருந்தாகத் திகழக்கூடியது தும்பை.

கிராமப்புறங்களில் சர்வ சாதாரணமாகக் காணப்படும் தும்பை, எளிதாகக் கிடைக்கக்கூடியது. பச்சைப் பசேல் நிறத்தில், கத்தி போல் நாலாபுறமும் நீட்டிக் கொண்டிருக்கும். முழுத் தாவரமுமே மருத்துவக் குணம் கொண்டது என்றாலும், இலையும், பூக்களும் மருத்துவ குணம் அதிகமுள்ளவை.

கண்..... கணினியில் வேலை செய்பவர்களின் கண்கள் விரைவாகச் சோர்வடையும். இதனால் கண்களில் ஒருவிதமான வலி ஏற்படும். அதைப் போக்கவும், கண்களில் ஏற்படும் நோய் பாதிப்புகளை அகற்றவும் தும்பை இலையின் சாறு சிறந்த மருந்தாகும்.

தொண்டைச் சதைவளர்ச்சி.... 'டான்சில்ஸ்' எனப் படும் தொண்டைச் சதை வளர்ச்சியை தடுத்து விடும் தன்மை இதற்கு உண்டு. தும்பையின் தளிர் இலைகளைப் பறித்து நன்கு நீர் விட்டு அலசி அதனுடன் பாசிப் பருப்பு கலந்து வேக வைத்து, பின்னர் புளிக் கரைசலை ஊற்றி சிறி துநேரம் கழித்து தாளித்துக் கடைந்து சாப்பிட்டால் தொண்டைச் சதை வளர்ச்சி தடுக்கப்படும்.

குழந்தைகளுக்கு........ தும்பைப் பூவின் சாறு 4 சொட்டு, உத்தாமணிச் சாறு 4 சொட்டு, மிளகுத்தூள் 3 கிராம் இந்த மூன்றையும் தேனுடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுக் கோளாறுகளும், மாந்தம், பேதி போன்ற நோய்களும் குணமாகும். பெண்களுக்கு: வாயுப் பிரச்சினையால் சில பெண்களுக்கு மாதவிலக்கு தடைப்பட்டு தாமதமாகும்.

அவர்கள், தும்பை இலை, உத்தாமணி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து அதில் 3 கிராம் அளவு பசுவின் பாலுடன் கலந்து சாப்பிட்டால் மாதவிடாய் கோளா றுகள் நீங்கும். இதைச் சாப்பிடும் காலங்களில் புளி, காரம் ஆகியவற்றை உணவில் சேர்க்கக் கூடாது.


No comments: