Monday, January 28, 2013

வெற்றிலை..! PIPER BETEL.

 
1.மூலிகையின் பெயர்-:வெற்றிலை.

2.தாவரப் பெயர்-: PIPER BETEL.

3. தாவரக்குடும்பம் -: PIPER ACEAE.

4. வேறு பெயர் -: தாம்பூலம்நாகவல்லிவேந்தன்திரையல் என்பன.

5. 
வகைகள்-கம்மாறு வெற்றிலைகற்பூரவெற்றிலை மற்றும் சாதாரண வெற்றிலை என்பன.

6. 
பயன்தரும் பாகங்கள் -: கொடியின் இலை மற்றும் வேர்.

7. 
வளரியல்பு -: இது இந்தியாவில் வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும்வளர்கிறதுஇது ஒரு கொடி வகையைச் சேர்ந்ததுஇதன் இலைகள் இதயவடிவில் பெரிதாக இருப்பதோடு நுனி கூர்மையாகவும் இருக்கும்வடிகால் வசதி இருக்கவேண்டும்அகத்தி மரங்களை இடையில் வளர்த்தி அதில் கொடிகள் வளர வளர கட்டிக்கொண்டே செல்வார்கள்
மூங்கில் களிகளையும் பயன்படுத்துவார்கள்இதை ஆற்றுப் படுகைகளில் வியாபார ரீதியாக அதுகம் பயிரிடுகிறார்கள்கருப்பு நிறமுடன் நல்ல காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலைகற்பூர மணத்துடன் சறிது காரமாகவும் இருப்பது கற்பூர வெற்றலையாகும்வெற்றிலைக்கு நல்ல மணமும் காரமும் உண்டுஇது கொடி பதியம் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

8. 
மருத்துவப் பயன்கள் -: பொதுவான குணம்சீதம் நீக்கும்வெப்பம் தரும்அழுகல் அகற்றும்உமிழ்நீர் பெருக்கும்பசி உண்டாக்கும்பால் சுரக்க வைக்கும்காமத்தைத் தூண்டும்நாடி நரம்பை உரமாக்கும்வாய் நாற்றம் போக்கும்.வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறதுவெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும்தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.குழந்தைகளுக்கு வரும் சுரம்சன்னிக்குவெற்றிலைச் சாற்றில் கஸ்தூரிகோரோசனைசஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும்சளிஇருமல்மாந்தம்இழுப்பும் குணமாகும்.

வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலைமாலை கொடுக்க சளிஇருமல் குணமாகும்அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.

குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.

வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும்விதைப்பையில் ஏற்படும் வலிவீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.

கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லிஅளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்று உப்புசம்மந்தம்சன்னிசீதளரோகம்தலைவலிநீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும்.

வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும்சிறப்பாக இதை இரவில் கட்டுவது நல்லது.

சுக்குமிளகுதிப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். 5 கிராம் சூரணம்+10 மி.லிவெற்றிலைச்சாறு தேன் 10 கிராம் கலந்து காலைமாலை நோயிக்குத் தக்க வாறு 48-96 நாள் சாப்பிட வேண்டும்.குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும்.

வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும்விடாது மூக்கில் ஒழுகும் சளிக்கும் வெற்றிலைச்சாற்றை மூக்கில் விட குணமாகும்.

ஒரிசாவில் சில பகுதிகளில் பெண்கள் குழந்தைகள் பிறக்காமல் தடுக்க 10 கிராம் வெற்றிலை வேரையும்மிளகையும் சம அளவு வைத்து அரைத்து 20-40 நாட்கள் சாப்பிட்டு வருகிறார்கள்.

வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும்எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.









No comments: