Wednesday, December 31, 2014

புது ஆண்டே 2015

நெருப்பினில் வீழ்ந்தாலும்
வீழாது உயரப்பரக்கும்
பீனிக்ஸ் பறவையாய்
உன்னில் 
எத்தனை மாற்றங்கள்
நிகள்ந்தாலும்
நீ புதிதாய் பிறந்தும்
பின் மெல்ல மெல்ல இறந்தும்
மீண்டும் புத்துயிர் பெற்று
பிறக்கும் புத்தாண்டே
புது மலர் தூவி
உனை வரவேற்கும்
அனைவருக்கும்
நித்தம் சந்தோஷம்
தந்திடுவாய் புது ஆண்டே 2015
வெ.பழழுதிர் கண்ணன்

Aircel USSD Codes

Check Your Own Number → *1# or *234*4#
Balance Check → *125# or *127#
GPRS Data → *126*1# or *126*4#
Available minutes and SMS → *123#

Uninor USSD Codes:
Balance Check → *222*2#
Check SIM Card Number → *222*4#

Reliance USSD Codes

Balance Check → *367# or *306# or *402#
Check Internet Data → *333*1*3*1# or *367*3#
Check Your Number → *1#
Recharge → *368# or *305*<1 digit="" pin="">#
Special Packs → *777#
Caller Tunes → *999#
Packs → *123# or *321#
Free Net → *123*099#

BSNL USSD Codes

Balance Check → *123#
GPRS/3G Data, Local SMS, Onnet Voice, GPRS Data Night, All Active STVs by SMS → *112#
SMS Local → *123*1#
National SMS → *123*2#
Network Call → *123*5#
Local Network Call → *123*6#
Night GPRS Pack → *123*8#
Video Call Balance → *123*9#

Idea USSD Codes

Balance Check → *212# or *130# or *123#
Idea Service Menu → *147#
Check Your Number → *789# or *100# or *1#
Account balance → *456# or *457#
Check GPRS Balance → *125# or *131*3#
SMS Balance → *451#
Balance Transfer *567*Mobile Number*Rs.#
Idea Service → *147#
Idea Pack → *369#
Idea Price → *567#
Customer Care → 12345
Idea Menu → *111#
Active 3G → ACT 3G to 12345
Deactive 3G → DEACT 3G to 12345
GPRS Setting → SET to 12345

Airtel USSD Codes:

Balance Check → *123#
Check Your Number → *140*1600# or *282#
Daily and Monthly SMS pack → *555# or *777#
Special Five Offers → *222#
Airtel Gift Service → *141#
Facebook Fontwise Service → *325#
My airtel My Offers → *121#
Check GPRS Data → *123*7# or *123*10#
Daily SMS Count → *125*5#
Mobile Office Activation or Deactivation → *567#
Direct Call Customer Care → 198p2p1p4p2
DND service call → 1909
Twitter service → *515#
3G data balance → *123*11#

TATA DOCOMO USSD Codes:

Know Your Number → *1# or *580#
Balance Check → *111#
GPRS or Internet Data Check → *111*1#
Customer Care → 121
DND(Do Not Disturb) Call → 1909 or SMS → START DND to 1909
Recharge *135*2#
Balance Inquiry → *191*2#
Validity → *191*3#
Service Points → *191*4#
Last 3 Recharge History → *191*5#
Status of free usage(Pool Balance) → *191*6#
Start/Stop Services → *191*7#
Service Request → *191*8#
Customer Preference → *191*9*1#
Home Zone Locations → *191*9*2#
Daily SMS Count → *191*9*3#
DATA → *191*9*4#
CALL → *191*9*5#
Prepaid Bill Request → *191*9*6#
Edit & Add Account Details → *191*9*7#
Special Offers → *191*9*8#
3G Internet Packs → *141*1#
Local Flavour → *141*2#
ILD Packs → *141*3#
New Internet Packs → *141*4#
Daily/Weekly Packs → *141*5#
Music Unlimited → *141*6#
Chat Zone → *141*7#
Discount Zone → *141*8#
Talk More → *141*9#

Vodafone USSD Codes:

Balance Check → *141#
V2V Nite Minutes → *147#
Check SIM Card Number → *111*2#
Free SMS Balance → *142#
Calling Balance → *145#
Free Local Minutes → *148#
Active Data Plans → *111*6*1#
Usage Allowance → *111*6*2#
Best Offers → *111*8#
Offers → *121#
Low Balance Services → *111*9#
Bonus Cards → *111*7*#
Vodafone Delights → *111*1#
Last Three Calls → *111*3*1#
Last Three SMS → *111*3*2#
Last 3 Charges → *111*4#
Last 3 Recharges → *111*5#
--------------------------

Monday, October 27, 2014

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதான் நன்மைகள்

பொதுவாக ஒருவரின் ஒரு நாள் செயல்பாட்டிற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. உடலில் தண்ணீர் இல்லாமல் இருந்தால், உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதேப் போன்று அளவுக்கு அதிகமான தண்ணீர் குடித்தாலும், பிரச்சனைகள் நேரிடும். எனவே ஒரு நாளைக்கு ஒருவர் தன் உடல் எடைக்கு ஏற்ற எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் தண்ணீர் குடிப்பது அவசியமாகிறது.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

தண்ணீர் மிகவும் சிறப்பான ஒரு பானமாகும். இத்தகைய தண்ணீரானது தாகத்தை தணிப்பதோடு, உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரக்கூடியதும் கூட. மேலும் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம் என்பது தெரியுமா? பொதுவாக உடலில் ஏற்படும் நோய்களானது வயிற்றில் தான் உற்பத்தியாகிறது. எனவே வயிற்றை சுத்தமாக வைத்துக் கொண்டால், நோய்கள் வராமல் தடுக்கலாம். அதற்கு தண்ணீர் தான் பெரிதும் உதவியாக இருக்கும்.

இப்படி வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் முறையானது ஜப்பானில் இருந்து வந்ததாகும். ஜப்பானிய மக்கள் தான் தினமும் காலையில் முகத்தை கழுவியதும் பற்களை துலக்காமல் கூட, 4 டம்ளர் தண்ணீரை குடிப்பார்கள். மேலுடம் அப்படி குடித்த பின்னர் 1 மணிநேரத்திற்கு எதுவும் சாப்பிடமாட்டார்கள்.

இதற்கு பெயர் தான் தண்ணீர் தெரபி. இதனால் தான் ஜப்பானிய மக்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருக்கின்றனர். இங்கு அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து இனிமேல் காலையில் வெறும் வயிற்றில் தவறாமல் தண்ணீரை குடித்து வாருங்கள்

குடல் சுத்தமாகும்

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது குடலானது சுத்தமாகும். அதற்கு தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக்கூடும். இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தாலேயே, உடலில் உள்ள கழிவுகளானது முற்றிலும் வெளியேறிவிடும்.

நச்சுக்களை வெளியேற்றிவிடும்

தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். இதனால் உடலானது நச்சுக்களின் சுத்தமாக இருக்கும்.

பசியைத் தூண்டும்

தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.

தலைவலியை தடுக்கும்

பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால் தலைவலி அடிக்கடி ஏற்படும். அத்தகையவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தாண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து, தலைவலியானது குறையும்.

அல்சரைத் தடுக்கும்

காலையில் சாப்பிடாமல் அலுவலகத்திற்கு செல்பவர்கள், தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம்.

மெட்டபாலிசம் அதிகரிக்கும்

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிக் விகிதமானது 24 சதவீதம் அதிகரிக்கும். இதனால் உண்ணும் உணவானது விரைவில் செரிமானமடைந்துவிடும்.

இரத்த செல்கள் உற்பத்தியாகும்

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை கொண்டிருப்பதால், உடலானது எனர்ஜியுடன் இருக்கும்.

எடையை குறைக்க உதவும்

எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

பொலிவான சருமத்தைக் கொடுக்கும்

குடலானது சுத்தமாக இல்லாவிட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால் சருமமானது அழகை இழந்துவிடும். எனவே தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவோடு இருக்கும்.

தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது சிறுநீரகங்களுக்கு நல்லதா?

உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது.

மேலும் குழம்பு, ரசம், மோர் போன்ற திரவ உணவுகள் மூலமும் உடலுக்கு நீர்ச்சத்து கிடைத்துவிடுகிறது.

எனக்குத்தாகமே எடுப்பதில்லை. அதனால் தான் தண்ணீரே பெரும்பாலும் குடிப்பதில்லை என சிலர் ஆறு மணி நேரத்துக்கு தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள் இது தவறு.

ஏனெனில் ஆரோக்கியமாக உள்ளவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலிலிருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும்.

ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு தினமும் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறினால்தான் இயல்பு நிலை என்று அர்த்தம். இதய நோய், சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி குடிநீரின் அளவை நிர்ணயித்துக் கொள்வது அவசியம். ஏனெனில் கூடுதல் தண்ணீரை வெளியேற்ற இதயம் அதிகமாக ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டியிருக்கும்.

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதில் தவறில்லை உடலுக்கு நல்லது. நன்றாக பசி எடுக்கும். உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது. அதற்கு மேல் உடலுக்கு குடிநீர் தேவை இல்லை.

சிறுநீர் கழிக்கும் இடைவெளி

ஆரோக்கியமாக உள்ளவர்கள் 4 முதல் 6 மணி வரை நேரத்துக்கு ஒரு முறைதான் சிறுநீர் கழிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறையோ சிறுநீர் கழிக்க நேர்ந்தால் அதை அடிக்கடி எனக் கொள்ளலாம்.

அடிக்கடி சிறுநீர் கழித்தால் மருத்துவரிடம் அவசியம் ஆலோசனை பெற வேண்டும்.

குளிர் நீர் குடித்தால் எடை கூடுமா?

தண்ணீர் தேவையில்லையா?

இது உணவு செரிமானத்துக்கு மட்டுமே. மற்றபடி வேலை, வியர்வை போன்றவற்றையும்சேர்த்துக் கணக்கிட்டால், குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அவசியமாகிறது.

தண்ணீரால் என்ன நன்மைகள்?

நிறைய தண்ணீர் குடிப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். அவர்களுக்கு பருமன்வராது. குறிப்பாக காலையில் எழுந்ததும் 2 டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் குடித்தால்,உள் உறுப்புகள் சுத்தமாகும். வளர்சிதை மாற்றச் செயல்பாடு மேம்படும்.

உடலின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யாமல், குளிர்ச்சியாக வைத்திருக்கவும் தண்ணீர் உதவுகிறது. அதிலும் வெயில் காலத்தில், உடல் வெப்பநிலை எகிறாமலிருக்க,தண்ணீர் அவசியம் என்பதால்தான் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் எனவலியுறுத்தப்படுகிறது.

நமது உடலில் 60 சதவிகிதம் தண்ணீர் இருக்கும். அந்த அளவு எப்போதுவேண்டுமானாலும் அதிகரிக்கலாம். குறையவும் செய்யலாம். அதிகமாவதை நீர்கோர்ப்பு (வாட்டர் ரிட்டென்ஷன்) என்றும், குறைவதை உடலில் நீரற்ற வறட்சி நிலை(டீஹைட்ரேஷன்) என்றும் சொல்கிறோம்.

நீர்கோர்ப்புக்கான காரணங்கள்…

உணவில் உப்பு அதிகம் சேர்த்துக் கொள்வது, மசாலா அதிகமுள்ள உணவு, அரிசி போன்ற எளிதில் ஜீரணமாகும் கார்போஹைட்ரேட் உணவுகளை உண்பது, பருமன், நீண்ட நேரம் நின்றபடியோ, நடந்து கொண்டோ, உடலை வருத்தி வேலை பார்ப்பது, ஒரே நிலையில்உட்கார்வது, சிலருக்குத் தூங்கி எழுந்ததும், முகமெல்லாம் வீங்கினாற்போல இருக்கும்.

களைப்பாகவே உணர்வார்கள். இதெல்லாம்உடலில் தண்ணீர் கோர்த்துக் கொள்ளும் பிரச்னைக்கான அறிகுறிகள்.

சிறு நீரகக் கோளாறு உள்ளவர்கள்,பருமனானவர்கள், ஹைப்பர் டென்ஷன் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த அறிகுறி இருந்தால், அதுஅவர்களது நோயின் விளைவாக இருக்கலாம். மருத்துவரைக் கலந்தாலோசித்த பிறகே எதையும்செய்ய வேண்டும்.

மற்றபடி நல்ல ஆரோக்கியமான உடல் நிலையில் உள்ளவர்கள் இப்படி உணர்ந்தால்,அவர்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

அரிசி உணவைக் குறைத்து, கோதுமை, கேழ்வரகு, ஓட்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். கீரை மாதிரியான நார்ச்சத்துமிக்க உணவுகள் அவசியம். உப்பின் அளவை உடனடியாகக் குறைத்தாக வேண்டும்.தண்ணீர் கோர்த்துக் கொள்வது எத்தனைஆபத்தானதோ, அதே மாதிரிதான் நீரற்ற வறட்சி நிலையும்.

10 நபர்களில் ஒருவருக்கு இப்பிரச்னை வருகிறது. மயக்கம், தலைசுற்றல், களைப்பு,தலைவலி போன்றவை இதன் அறிகுறிகள். சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடலில்தண்ணீர் வற்றும்போது தீராத தலைவலி வரும். உடலுக்குத் தேவையான தண்ணீர் சேர்ந்தபிறகுதான், அந்தத் தலைவலி நீங்கும். அதிக வெயில் மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியஇரு விஷயங்களினால் தான் பெரும்பாலும் உடலில் தண்ணீர் வற்றும். நாக்கு வறண்டுபோவது, உதடுகள் வெடிப்பது, இதயத்துடிப்பு அதிகமாவது, சிறுநீர் அடர்த்தியாக வெளியேறுவது போன்றவையும் இதன் விளைவுகளே…

நம்மில் பலரும் செய்கிற தவறு என்ன தெரியுமா?

தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிப்பது. அப்படியில்லாமல், அடிக்கடி தண்ணீர்குடிக்கப் பழக வேண்டியது அவசியம். புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு டீஹைட்ரேஷன்பிரச்னை ரொம்ப சுலபமாக வரலாம். அதன் அடுத்த விளைவாக நுரையீரல் புற்றுநோய் தாக்கலாம். புகையை நிறுத்துவதும், அதிக தண்ணீர் குடிப்பதும்தான் தீர்வு. எப்படிக்குடிப்பது?தினம் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியமானாலும், எல்லோராலும் வெறும்தண்ணீரைக் குடிக்க முடியாது.

சிலருக்கு தண்ணீர் குடிப்பதென்றாலே வாந்தி வரும். என்ன செய்ய?

ஒரு லிட்டர் தண்ணீரில் கால் மூடி எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து, ஒரு சிட்டிகை உப்புசேர்த்து அவ்வப்போது குடிக்கலாம். 100 மி.லி கொழுப்பு நீக்கப்பட்ட தயிரில் 1 லிட்டர்தண்ணீர் விட்டு, நீர் மோராக்கி, அடிக்கடி சிறிது சிறிதாகக் குடிக்கலாம்.

சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்து, ஆற வைத்த தண்ணீரைக் குடிக்கலாம். சுவையாகவும் இருக்கும். செரிமானத்துக்கும் நல்லது. உடல் வறட்சியைப் போக்க இளநீரைப் போன்றமகத்தான திரவம் வேறில்லை. வெயிலின் கடுமையை விரட்ட,

குளிர் பானங்களைக் குடிப்பதைத் தவிர்த்து இளநீர் குடிப்பதே சிறந்தது.சத்து?இத்தனைமகிமை வாய்ந்த தண்ணீரில் ஏதேனும் சத்துகள் இருக்கிறதா எனப் பார்த்தால் இல்லை. ஆனால், தண்ணீர் அதிகமுள்ள காய்கறி, பழங்களுக்குப் பஞ்சமே இல்லை. அவற்றைச் சாப்பிடுவதன் மூலம் தண்ணீர் தேவையும் பூர்த்தியாகும். காய்கறி, பழங்களில் உள்ளசத்துகளும் உடலுக்குப் போகும். பூசணிக்காய், சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய்போன்ற காய்கறிகளிலும், தர்பூசணி, கிர்ணி, பேரிக்காய் போன்ற பழங்களிலும் தண்ணீர்அதிகம். ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம்,வறட்சியும் போகும். வைட்டமின் சி சத்தும் சேரும்.

குளிர் நீர் குடித்தால் எடை கூடுமா?

அப்படியெல்லாம் இல்லை. குளிர்ந்த தண்ணீரோ, வெந்நீரோ எதுவானாலும், அதை, நம்உடல், தன்னுடைய வெப்பநிலைக்கு மாற்றித்தான் உபயோகிக்கும். வெந்நீர் குடித்தால்,கொழுப்பு சேராது என்று சொல்வதன் பின்னணியும் இதுதான். வெந்நீரை தனதுவெப்பநிலைக்கு மாற்றும் வளர்சிதை மாற்ற இயக்கம் அதிகரிப்பதால், உடலில் கொழுப்புதங்குவதில்லை.

யாருக்கு தண்ணீர் கூடாது?

சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், இதய நோயாளிகளுக்கு (இதயத்தின் சுருங்கி விரியும் தன்மை 30க்கும் குறைவானால்) நாளொன் றுக்கு 1,000 மி.லி. தண்ணீர் மட்டுமே அனுமதி. அது அவர்கள் மருந்து எடுத்துக்கொள்ள, சமைக்க என எல்லாம் அடக்கியது. அளந்து அளந்துதான் எடுத்துக் கொள்ள வேண்டும். கிட்னி பாதித்தவர்களுக்கு, பாதிப்பின் தீவிரம்பொறுத்து, தண்ணீரின் அளவு 500 மி.லி. வரை குறைக்கப்படவும் கூடும்

குழந்தைகளுக்குத் தண்ணீர்?

பள்ளிக்கூடம் செல்கிற குழந்தைகள், பள்ளிக் கழிவறையின் சுகாதாரமற்ற சூழலுக்குப்பயந்து, சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்க, தண்ணீரே குடிக்க மாட்டார்கள். இது மிகவும் தவறு. தண்ணீரே குடிக்காமலும், சிறுநீரை அடக்கியும் பழகினால், மிக இளம் வயதிலேயேயூரினரி இன்ஃபெக்ஷன் வரும்.

சிறுநீர் கழிக்கும்போது வலி, கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீர் வெளியேறுவது,அடர்த்தியாக, அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுவது போன்றவை இன்ஃபெக்ஷனுக்கானஅறிகுறிகள். அந்த அளவுக்குப்போக விடாமல், முன்கூட்டியே அடிக்கடி தண்ணீர் குடிக்கப்பழக்குவது ஆரோக்கியமானது.

தகவல் அறியும் உரிமைச்சட்டம், 2005

நமது மத்திய, மாநில அரசுகள் அனைத்தும் மக்கள் வரிப் பணத்தில்தான் இயங்கி வருகின்றன. நாம் அனைவருமே அரசுக்கு வரி செலுத்துகிறோம். பிச்சைக்காரர் கூட ஒரு தீப்பெட்டியை காசு கொடுத்து வாங்கும்போது, அதில் ஒரு பகுதி அரசுக்கு வரியாக மறைமுகமாகச் செல்கிறது. அரசு என்பது மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே இயங்குகிறது.

மக்களின் வரிப்பணம்தான் அரசின் பணம். ஆனால், இந்த வரிப்பணம் முறையாகச் செலவிடப்படுகிறதா என்று மக்கள் கண்காணிக்கிறார்களா? அரசுக்குப் பணம் கொடுப்பதால் மக்கள்தான் எஜமானர்கள். எனவே, ஒவ்வொரு மனிதருக்கும் தான் கொடுக்கும் பணம் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்று கேட்க முழு உரிமை உண்டு. ஆனால், செய்கிறோமா? இல்லை. அந்த உரிமையைப் பயன்படுத்தக் கூடாது என்பதல்ல காரணம். மாறாக, அந்த உரிமையைப் பயன்படுத்துவதற்கான சட்டபூர்வமான, நிர்வாக ரீதியான வழி எதுவும் இல்லை என்பதே காரணமாகும்.

தகவல் அறியும் உரிமை குறித்து 1976-ம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாகக் கூறிவிட்டது. ராஜ்நாராயண் என்பவர் உத்தரப் பிரதேச அரசுக்கு எதிராகத் தொடுத்த ஒரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தகவல் அறியும் உரிமையை வலியுறுத்தியுள்ளது. அத்தீர்ப்பின் சாராம்சம்: அரசியல் சாசனத்தின் 19 (1)-வது பிரிவின்படி குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் முழுமையான பேச்சுரிமை, எழுத்துரிமை உண்டு; மேலும் அதற்குரிய தகவல்களைப் பெறவும் முழு உரிமை உண்டு. காரணம், நமது நாடு ஜனநாயக நடைமுறையில் இயங்கும் அமைப்பாகும்.

ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். தங்கள் மீது எத்தகைய நிர்வாகம் நடத்தப்படுகிறது என்பதை அறியவும் தாங்கள் செலுத்திய வரிப் பணம் எந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும் முழு உரிமை உள்ளது. இதைத்தான் அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது”.

இத்தனை இருந்தாலும் தகவல் அறியும் உரிமைக்காக ஒரு புதிய சட்டம் தேவையா? ஆம், தேவைதான். காரணம், தற்போதைய நடைமுறைப்படி ஓர் அலுவலகத்துக்குச் சென்று, விவரம் அறிந்துகொள்வதற்காக உரிய ஆவணத்தைக் கேட்டால், எந்த அதிகாரியும் தர மாட்டார். ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட தகவலை எங்கே, யாரிடம் பெற விண்ணப்பிக்கலாம்? அந்த உரிமையைப் பெறக் கட்டணம் எவ்வளவு? எத்தனை நாளுக்குள் அத்தகவல் வந்து சேரவேண்டும்? குறிப்பிட்ட தகவலைத் தர அதிகாரி மறுத்துவிட்டால், அவருக்கு என்ன தண்டனை தரலாம்? என்ற விவரங்களை அறியலாம்.

இச்சட்டத்தை அரசு கொண்டு வருவதற்கு மக்கள் இயக்கம்தான் காரணம். ராஜஸ்தானில் 1990-ம் ஆண்டு ஓர் அரசுத் திட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளிகளுக்கு தினக் கூலி ரூ.22 என நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பிட்ட ஒரு தொழிலில் அவர்களுக்குத் தினமும் ரூ.11 மட்டுமே தரப்பட்டது. ஆனால், உண்மையில் சம்பளப் பதிவேட்டில் ரூ.22 தினக் கூலி எனப் பதிவு செய்யப்பட்டு வந்தது. தங்களுக்கு ஊதியம் குறைவாகத் தரப்பட்டது குறித்து தொழிலாளிகள் நிர்வாகத்திடம் கேட்டதற்கு, அத்தொழிலாளர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றும் அதனால்தான் ஊதியம் குறைத்துத் தரப்பட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில் திருப்தி அடையாத தொழிலாளர்கள் வெகுண்டெழுந்து ஊதியங்களைப் பதிவு செய்யும் பதிவேட்டைக் கேட்டனர். அதை மறுத்த நிர்வாகம் அத்தகைய ஆவணங்கள் அரசு ரகசியம் என்று கூறினர்.

அங்கேதான் தொழிலாளர்களுக்குக் கை கொடுக்க வந்தார் அருணா ராய். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து மக்கள் சேவைக்காக பதவியைத் துறந்து “விவசாய தொழிலாளர்கள் சங்கம்’ என்ற அமைப்பை நிறுவினார். அவரது அமைப்புடன் மக்கள் இணைந்து தொடர்ந்து போராடியதை அடுத்து, 2005 ஆம் ஆண்டு அக்டோபரில் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது.

தகவல் அறியும் உரிமை சட்டம் 68 நாடுகளில் நடைமுறையில் உள்ளது. எனினும், இந்திய சட்டத்தில் உள்ள பிரிவுகள் மிகச் சிறந்தவை. அதன்படி, யார் வேண்டுமானாலும் அரசிடம் எந்தத் தகவலையும் கேட்டுப் பெறலாம். எந்த ஆவணத்தையும் ஆய்வு செய்யலாம். அதன் நகலைப் பெற்றுக் கொள்ளலாம். எந்தப் பணியையும் நேரடியாகப் பார்வையிடலாம். எந்தப் பணி நடைபெற்றாலும், அதில் பயன்படுத்தப்படும் பொருளின் தரம், விலை ஆகியவை குறித்த விவரங்களைக் கேட்டுப் பெறலாம்.

மக்களுக்கு இந்தத் தகவலை, சம்பந்தப்பட்ட அதிகாரி 30 நாளில் அளிக்கவேண்டும். தவறினால், கெடு தேதியைக் கடந்த ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250 என அபராதம் செலுத்த வேண்டும். அது மட்டுமல்ல. பெற்ற தகவலில் திருப்தி இல்லை என்றால், மேல் முறையீடு செய்யலாம். இதற்காகத் தகவல் உரிமை ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின் சில பணிகள் சரியாக இயங்கியதற்கு இரு சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

தில்லியில் வசிக்கும் குடிசைவாசிப் பெண் திரிவேணி. அவரது குடும்ப மாத ஊதியம் ரூ.500 தான். அவரது குடும்பத்தில் நான்கு பேர் உள்ளனர். ஏழைமக்களுக்கான ரேஷன் அட்டை திரிவேணிக்கு வழங்கப்பட்டது. அதன் மூலம் கோதுமை கிலோ ரூ.2, அரிசி கிலோ ரூ.3 என்ற சலுகை விலையில் கடைகளில் வாங்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது. ஆனால், ஓராண்டாக அவர் கடையில் வாங்கச் சென்றால், சரக்கு இல்லை என்றே பதில் வந்தது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அவர் வழக்குத் தொடர்ந்தார். ஆவணங்களைக் கேட்டார். தன் பெயரில் உணவு விநியோகிக்கப்பட்டதா என்று கேட்டார்.

ஆவணங்களில் அவர் பெயரில் மாதந்தோறும் அரிசியும், கோதுமையும் விநியோகிக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் கையெழுத்திட வேண்டிய இடத்தில் கைநாட்டு வைக்கப்பட்டிருந்தது. இத்தனைக்கும் திரிவேணிக்கு எழுதவும் படிக்கவும் தெரியும்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் கடைக்காரரின் உரிமம் பொதுவாக ரத்து செய்யப்படும். இதை அறிந்த கடைக்காரர் அஞ்சினார். திரிவேணியைத் தேடிச் சென்று, தான் செய்த தவறை மறந்து மன்னிக்குமாறு கெஞ்சினார்.

இவ்வாறு போராடி வென்ற திரிவேணிக்கு அரிசியும் கோதுமையும் தற்போது தொடர்ந்து கிடைத்து வருகின்றன. இதைப் போன்றே உதய் என்பவரும் ஜெயித்துக் காட்டியுள்ளார்.

தில்லியில் வசந்த் கஞ்ச் என்ற இடத்தில் வசிக்கும் அவர் ஐ.ஐ.டி. எதிரில் உள்ள ஒரு சாலை பத்தே நாளில் அவசரகோலத்தில் போடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவ்வாறு குறுகிய காலத்தில் போடப்படும் சாலை எந்த தரத்தில் இருக்கும் என்று அவர் சந்தேகப்பட்டார். தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உதவியை நாடினார்.

அது தொடர்பான ஆவணங்களைப் பார்வையிடக் கோரினார். அங்கு பயன்படுத்தப்பட்ட தார், மணல், கற்களின் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், அந்த சாலையை அமைத்த செயல் பொறியாளர் அவரிடம் வந்து, சாலை முழு அளவில் பழுதுபார்க்கப்படும் என்று உறுதியளித்தார். அதன் பின் உதய் அந்த சாலையைப் பார்வையிட்டார். அவர் சுட்டிக் காட்டிய குறைபாடுகள் அனைத்தும் களையப்பட்டன.

ஊழல், முறைகேடு இல்லாத உலகம் இருக்கும் என்று யாரும் கனவு காண இயலாதுதான். ஆனால், ஒவ்வொரு தனி நபரும் அநீதியை எதிர்த்துப் போராடும் ஆற்றலைப் பெற முடியும். அதைத் தகவல் அறியும் உரிமை சட்டம் நிரூபித்துள்ளது.

2005 ஆம் வருடத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இந்திய அரசு இயற்றியுள்ளது. 2005 அக்டோபர் 13ஆம் தேதியிலிருந்து இது அமலுக்கு வருகிறது. பொது நிறுவனங்களின் செயல்பாடுகள் மறைவேதும் இல்லாமல் பொதுமக்களுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியவும், அந்த நிறுவனங்களின் செயல் பாட்டுக்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பொறுப்பேற்க வைக்கவும், பொதுமக்கள் அந்த நிறுவனங்களின் செயல் பாட்டினை அறிந்து கொள்ள வழிவகை செய்யும் சட்டம் தான் இச்சட்டம். இச்சட்டத்தின் பிரிவுகள் 8,9 இன் கீழ் சில வகையான தகவல்கள் வெளியிடப் படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. தலைமைப் பொதுத்தகவல் அலுவலர் ஒருவரையும் நியமிக்க இச்சட்டம் வழிவகுக்கிறது.

அரசு மற்றும் அரசிடம் உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து, தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்திய அரசு 2005ம் ஆண்டு கொண்டு வந்தது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும் அக்.25ம் தேதி, தகவல் அறியும் உரிமை சட்ட தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

2004 டிச., மாதம் பார்லிமென்ட்டில் இச்சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 2005 மே 11ல் லோக்சபாவிலும், மே 12ல் ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜூன் 15ம் தேதி குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார். ஜூன் 21ல் அரசிதழில் வெளியிடப்பட்டு, அக்.12ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின் மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனும், அறிய விரும்பும் தகவல்களை பெற உரிமை உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் வெளிப்படையாக இருப்பதும், பொதுமக்கள் யார் கேட்டாலும் அவர்களுக்கு தகவல்களை தெரிவிப்பதும் அரசின் கடமை என இதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தகவல்களை தாமாக முன் வந்து தெரிவிக்கவும் இச்சட்டம் வழி செய்கிறது.

எப்படி பெறலாம்:

தகவலை பெற விரும்புவோர் அது குறித்து எழுத்து மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பிப்போர் பெயர், முகவரி மற்றும் கையெழுத்துடன் அனுப்பப்படும் விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் அலுவலர் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார். அவசரத் தகவலுக்கு 48 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, போர்யுக்தி போன்ற சில பிரிவின் கீழ்வரும் தகவல்களை அரசு தெரிவிக்க தேவையில்லை. பார்லிமென்ட், சட்டசபைக்கோ மறுக்கப்படாத தகவல்கள், தனிநபருக்கும் மறுக்கப்படக் கூடாது என்பது இச்சட்டத்தின் நோக்கம்.

நடவடிக்கை:

குறித்த நேரத்தில் தகவல் தராமலும், தவறான தகவலை தருவதும் குற்றம். இதன்படி தவறு செய்யும் அரசு அதிகாரிகளை தண்டிக்கவும், அபராதம் வழங்கவும் மத்திய, மாநில தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. இச்சட்டத்தை குடிமக்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் லஞ்சம், ஊழலை தடுக்கலாம். பயனற்ற தகவல்களை பெறுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அரசு எந்திரம் சரியாக செயல்படவும், அதன் மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கவும் இச்சட்டம் வழி வகுக்கிறது.

1. “ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்துபெற்றுக்கொள்ளலாம்.

2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் (PIO) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன ? , தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண் , மின்னஞ்சல் முகவரி (இவை இரண்டும் கட்டாயமில்லை) ஆகியவைகள் இடம்பெற வேண்டும்.

3. சகோதரர்களே, மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும்.

4. மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும்.

5. வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்தரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.

6. நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும் கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்துகொள்ளலாம்.

7. உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்தவேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நமது ஊர் பொது நலன் சம்பந்தப்பட்ட என்ன என்ன கேள்விகள் சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து, தகவல்களை கேட்டுப்பெறலாம்?

எடுத்துக்காட்டாக:

1. நமது மாவட்ட MP அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (5 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?

2. அதேபோல் நமது தொகுதி MLA அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (2 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?

3. நமது ஊருக்கு மத்திய அகல ரயில் பாதை திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? எப்பொழுது பணிகள் நிறைவுபெறும்?

4. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களான ‘ பசுமை வீடுகள் திட்டம்’ , இந்திர நினைவு குடியிருப்பு திட்டம், தன்னிறைவு திட்டம் (முந்தைய ஆட்சியில் ‘ நமக்கு நாமே திட்டம்), அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு உதவியின் கீழ் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை நமது சமுதாயத்தை சார்ந்த ஏழை எளியோர்கள் மற்றும் நமது ஊர் எந்த வகையில் பயன் பெறலாம். இப்பயனை பெற யாரை அணுகுவது? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும்? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

5. மாநில அரசால் வழங்கப்படுகிற நலதிட்ட உதவிகளான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் (தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்கால்கள், எத்தீம்கான இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் ஆகியோர் பயன்பெற தகுதியுடையோர் ஆவார்கள்) நலவாரியம் மூலமாக எவ்வாறு உதவிகள் பெறுவது? இப்பயனை பெற யாரை அணுகுவது? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

6. மத்திய அரசால் வழங்கப்படுகிற மானிய தொகையின் கீழ் புனித ஹஜ் பயணம் செய்ய நமது ஊரைச்சேர்ந்த ஏழை எளியோர்கள் எவ்வாறு உதவிகள் பெறுவது? இப்பயனை பெற யாரை அணுகுவது? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும்? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

7. நமது ஊரில் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின் அளவு திறன் எவ்வளவு ? இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிருக்கும் வினியோகிக்கிற மின் திறன் அளவு என்ன? டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் நமது ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நூண்டபட்டுள்ள போஸ்ட் மரங்கள் இவைகளின் தரம் என்ன? பாதுகாப்பானவையா? குடியிருப்பு பகுதியின் மேலே மின் கம்பிகள் செல்கிறதா? இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகுமா?

8. நமதூரைச் சேர்ந்த நபர்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

9. நமது அரசு மருத்துவமனையின் தரம் மற்றும் சேவையை உயர்த்த யாருடைய கவனத்துக்கு கொண்டு செல்வது?

10. மேலும் நமதூரில் உள்ள குடி நீர் தொட்டிகள் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது? மழை காலங்களில் ஏற்படுகிற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க அதில் குளோரின் கலக்கப்படுகிறதா?

11. நமதூரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன? அதில் ஏதும் தூர்வாரப்பட்டு உள்ளதா? ஆக்கிரமிப்புகள் எதுவும் உள்ளதா?

12. நமதூரில் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் எப்பொழுது ஆரம்பமாகும்? இப்பணிகள் எப்பொழுது நிறைவு பெரும்? இப்படி நீங்களும் இதே போல் என்னற்ற பல தகவல்களை கீழ் கண்ட சம்பந்தப்பட்ட மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப்பெறலாம்.

மாநில அரசு தகவல்கள் பெற :
-
திரு. எஸ். இராம கிருட்டிணன், (இ. ஆ. ப, ஓய்வு)
மாநில தலைமை தகவல் ஆணையர், காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம், முதல் மாடி, (வானவில் அருகில்) பழைய எண் : 273, புதிய எண் : 378 , அண்ணா சாலை, (தபால் பெட்டி எண் : 6405) தேனாம்பேட்டை, சென்னை – 600 018 தொலைப்பேசி எண் : 044 – 2435 7581 , 2435 7580 Email : sic@tn.nic.inhttp://www.tnsic.gov.in/contacts.html
Tamil Nadu Information Commission

கந்தர் சஷ்டி கவசம்


கந்தர் சஷ்டி கவசம் படித்தால் கிடைக்கும் நன்மை என்ன?

சில வருடங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த போது அங்கே தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் சில வகுப்புகள் நடத்தப்படுவதுண்டு.

அது ஒரு பங்குச்சந்தை வியாபார நிறுவனமாக இருந்ததால் மார்க்கெட்டிங் வேலை மிக முக்கியமானதாக இருந்தது. பங்குச்சந்தை மார்க்கெட்டிங் என்றால் சாதாரனம் இல்லை. உங்களிடம் இருக்கும் பணத்தை நீங்கள் முழித்திருக்கும் போதே உங்கள் சட்டைப்பையிலிருந்து எடுத்து நிறுவனத்திற்கு கொடுத்துவிட வேண்டும்.

இது குளோப்ளைசேன் மூலமாக வந்த புதிய வியாபார உத்தி. அது ஒரு புறம் இருக்கட்டும்.

தொழிலாள‌ர்களுக்காக நடத்தப்படும் இந்த வகுப்பில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும், உடலைப் பேணிப் பாதுகாக்கவும் சில விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பார்கள். அதில் ஒன்று அதி டென்ஷனாகவே வாழும் நாம் மனதை எப்படி அமைதிப்படுத்திக் கொள்வது என்பதற்க்கு ஒரு புதிய முறையைக் கற்றுக் கொடுத்தார்.

இதை அறிமுகப்படுத்தியவர் என்று சொல்லி ஒரு ஆங்கிலேயரின் பெயரைச் கூறினார். மனோவியல் ரீதியாக அவர் கொடுக்கும் இந்தப் பயிற்ச்சி நல்ல பலனைக் கொடுத்தது என்றும் கூறி அதை செய்யச் சொன்னார்.

அவர் சொன்னதாவது:

முதலில் கண்களை மெதுவாக மூடிக்கொள்ளுங்கள்.

உங்கள் வாயால் இப்பொழுது மெதுவாகச் சொல்லுங்கள்…ஆங்கிலத்தில் துவங்கினார்..

மை ஐஸ் ஆர் ரிலாக்ஸ்!

மை நோஸ் ஆர் ரிலாக்ஸ்!

மை மௌத் இஸ் ரெலாக்ஸ்!

மை ஹான்ட்ஸ் ஆர் ரிலாக்ஸ்!

என்று ஒவ்வொரு பாகத்தையும் வாயால் சொல்லி மனதால் ரிலாக்ஸ் படுத்தினார்.

இவற்றை சொல்லி முடித்து விட்டு இப்பொழுது கண்களை மெதுவாக திறங்கள். இப்பொழுது உங்கள் மனதும் உடலும் ரிலாக்ஸாக இருக்கிறதா? என்று எல்லோரிடமும் கேட்டு தெரிந்து கொண்டார்.

பிறகு நிகழ்ச்சி பற்றி எல்லோரிடைய கருதையும் கேட்டார்.

என் முறை வந்தது. நான் சொன்னேன்…”சார் இது என்ன பிரமாதம் இதை நான் குழந்தைப் பருவம் முதலே செய்து கொண்டிருக்கிறேனே!” என்றேன்.

ஆச்சரியத்துடன் பார்த்த அவர் “அது எப்படி? எனக்குத் தெரிந்த வரை இது புதிய மனோவியல் முறை! இதை எப்படி நீங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே செய்ய முடியும்” என்று கேட்டார்.

நான் சொன்னேன் “சார் நீங்க என்னவெல்லாம் சொன்னீர்களோ அது அனைத்தும் நான் சிறு வயது முதலே சொல்லும் கந்தர் சஷ்டி கவசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. உடலின் ஒரு அவயவம் விடாமல் தியானிக்கும் பயிற்ச்சியை அது ஆன்மீக ரீதியாக மிக அருமையாக கொடுக்கிறது” என்றேன்.

மிகவும் ஆர்வமாக இதைக் கேட்ட அவர் கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லுவதால் ஏற்படும் பயனைப் பற்றி விளக்கமாக சொல்லச் சொன்னார்.

நானும் சொல்லத் துவங்கினேன்.

கந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வோரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம்.

உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்.

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க‌!

விதிச்செவி இரண்டும் வேலவர் காக்க‌!

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க‌!

பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க‌!

கன்னமிரண்டும் கருனைவேல் காக்க‌!

என் இளங்கழுத்தை இனியவேல் காக்க‌! .

என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்க என்று கூறுகிறோம்.

இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களைப் பற்றி சொல்லும் போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது. மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது.

இப்படி மூளையின் தனி கவனத்திற்க்கு வரும் போது அந்த பாகத்திற்குரிய மூளையின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இப்படி தினசரி மிகவும் அமைதியான மனநிலையில் நாள் இருமுறை நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்க்கு கொண்டு வந்தால் உடலின் சிறு சிறு குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும்.

மனோவைத்திய ரீதியாக உடல் நோய்களைப் போக்க முடியும் என்று தற்காலங்களில் நாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி கேட்பதில்லையா. இன்றைக்கு ஆராய்ச்சி என்று சொல்லி வெள்ளைக்காரன் கண்டுபிடித்ததாகச் சொல்லுவதை நம் முன்னோர்கள் ஏற்கனவே கண்டறிந்தது மட்டுமல்லாமல் அவற்றைப் பயன்பாட்டில் செயல்படுத்தியும் வந்திருக்கிறார்கள்.

இந்த மனோவைத்திய முறை நம் வாழ்க்கை முறையாகவும் இருக்கிறது.

கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பதாலேயே இதை கந்தர் சஷ்டி கவசம் என்று கூறினார்கள்.

இந்த கவசத்தில் வரும் வரிகளில் நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று ஒரு வரி உண்டு. வார்த்தைகளால் சொல்லும் மந்திரத்தினால் நவகோள்கள் எப்படி நன்மை செய்யும் என்றும் தோன்றலாம். நவ கிரகங்களின் மாறுதல்களால் பூமியின் மீதே பாதிப்பு ஏற்படும் போது மனித உடலில் பாதிப்பு ஏற்படாதா என்ன?

கிரகங்களின் மற்றத்தால் நமது உடலில் ரத்த ஓட்டம் மற்றும் வாத பித்த பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் எந்த ஒரு வியாதிக்கும் இவற்றில் ஏற்படும் மாற்றமே அடிப்படை. ஆனால் கவசம் படிப்பதன் மூலமாக தினசரி மூளை நமது உடலை உற்று நோக்கி தானே தன்னைச் ச‌ரிசெய்யும் வேலையை செய்து கொண்டே இருப்பதால் நவ கோள்களால் ஏற்ப்படும் உடல் மாறுபாடு கூட பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே இதன் சாரம். அதையே நவகோள்கள் கூட மகிழ்ந்து நன்மை அளிப்பதாக கூறினார்கள்.

இப்படி கந்தர் சஷ்டி கவசம் தொடர்ந்து படிப்பதில் மனோவியல் ரீதியான‌ நன்மைகள் உள்ளன.

ஆனால் ஆராயாமலே தற்க்காலத்தில் எல்லாவற்றையுமே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவு மடையர்களுக்கு இது புரிவது சாத்தியமில்லை. ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை அறிவே கூட இருப்பதில்லை என்பதே உண்மை.

ஆகையால் இந்து தர்மத்தில் சொல்லப்படும் பல அறிவியல் மற்றும் மனோரீதியான சூட்சுமங்களை புரிந்து கொள்ளும் நீங்கள் தான் உண்மையான பகுத்தறிவாளர்கள். ஆகையால் சொல்கிறேன் இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்”. இவ்வாறு சொன்னவுடன் பயிற்சியாளர் மிகவும் மகிழ்ந்து என்னைப் பாராட்டினார்.

அவரும் கந்தர் சஷ்டி கவசம் படிப்பதில் உள்ள நன்மைகளை ஏற்றுக் கொண்டார். நீங்களும் இதை ஏற்றுக் கொண்டால் தாமதிக்காமல் இன்றே படிக்கத் துவங்கலாமே!

காக்க காக்க கனகவேல் காக்க!

நோக்க நோக்க நொடியில் நோக்க!

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்

திருப்புகழ் 24 அம்பொத்த விழி (திருச்செந்தூர்)



தந்தத் தனனத் தந்தத் தனனத்
தந்தத் தனனத் ...... தனதானா

......... பாடல் .........

அம்பொத் தவிழித் தந்தக் கலகத்
தஞ்சிக் கமலக் ...... கணையாலே

அன்றிற் குமனற் றென்றற் குமிளைத்
தந்திப் பொழுதிற் ...... பிறையாலே

எம்பொற் கொடிமற் றுன்பக் கலனற்
றின்பக் கலவித் ...... துயரானாள்

என்பெற் றுலகிற் பெண்பெற் றவருக்
கின்பப் புலியுற் ...... றிடலாமோ

கொம்புக் கரிபட் டஞ்சப் பதுமக்
கொங்கைக் குறவிக் ...... கினியோனே

கொன்றைச் சடையற் கொன்றைத் தெரியக்
கொஞ்சித் தமிழைப் ...... பகர்வோனே

செம்பொற் சிகரப் பைம்பொற் கிரியைச்
சிந்தக் கறுவிப் ...... பொரும்வேலா

செஞ்சொற் புலவர்க் கன்புற் றதிருச்
செந்திற் குமரப் ...... பெருமாளே.

சொல் விளக்கம் 

அம்பு ஒத்த விழித் தந்தக் கலகத்து அஞ்சிக் கமலக்
கணையாலே ... அம்பு போன்ற கண்களை உடைய பெண்கள் பேசும்
அவதூறு மொழிக்கு அஞ்சியும், காமன் எய்த தாமரைப் பூ அம்பினாலும்,

அன்றிற்கும் அனல் தென்றற்கும் இளைத்து அந்திப்
பொழுதில் பிறையாலே ... அன்றில் என்னும் பறவைக்கும், தீயை
வீசும் தென்றல் காற்றுக்கும் இளைத்து, மாலை நேரத்தில்
வந்துள்ள பிறைச் சந்திரனாலே,

எம் பொன் கொடி மன் துன்பக் கலன் அற்று இன்பக் கலவித்
துயர் ஆனாள் ... எமது கொடி போன்ற மகள் அணிந்திருக்கும்
துன்பத்தைச் செய்யும் ஆபரணங்களை அகற்றி, இன்பத்தைத்
தரும் உன்னுடன் கலப்பதையே நினைவாகத் துயரம் கொண்டுள்ளாள்.

என் பெற்று உலகில் பெண் பெற்றவருக்கு இன்பப் பு(ல்)லி
உற்றிடலாமோ ... எதை வைத்துக்கொண்டு இப்பூமியில் பெண்ணைப்
பெற்றவர்களுக்கு இன்பத்தை அடைந்து இருத்தல் வாய்க்குமோ?

கொம்பக் கரி பட்டு அஞ்சப் பதுமக் கொங்கைக் குறவிக்கு
இனியோனே ... தந்தங்கள் உள்ள யானை (விநாயகர்) எதிரில்
தோன்றினதால் அஞ்சிய, தாமரை அரும்பு போன்ற மார்பகத்தை
உடைய, குறப் பெண்ணாகிய வள்ளிக்கு இனியோனே,

கொன்றைச் சடையற்கு ஒன்றைத் தெரியக் கொஞ்சித்
தமிழைப் பகர்வோனே ... கொன்றை மலர் அணிந்த சடையுடைய
சிவபெருமானுக்கு ஒப்பற்ற அந்த பிரணவப் பொருளை விளக்கமாகத்
தெரியும்படி கொஞ்சித் தமிழில் கூறியவனே,

செம் பொன் சிகரப் பைம்பொன் கிரியைச் சிந்தக் கறுவிப்
பொரும் வேலா ... செம் பொன் சிகரங்களை உடைய, பசுமையும்
அழகும் பெற்ற கிரெளஞ்ச மலை குலைந்து அழியும்படி, சினம்
கொண்டு சண்டை செய்த வேலனே,

செம் சொல் புலவர்க்கு அன்புற்ற திருச்செந்திற் குமரப்
பெருமாளே. ... செம்மையான சொல்லுடைய புலவர்கள் பால் அன்பு
கொண்ட, திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே.

வெள்ளை அடிப்பது ஏன்

ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் வடலூரில் இருந்து புறப்பட்டு விருத்தாசலம் வந்து இரவு ரயில் ஏறினார்.அந்த ரயில் சேலம் டவுன் ஸ்டேஷனுக்கு வந்தது. ரயிலை விட்டிறங்கி குழாயில் கை கால் முகம் கழுவிக் கொண்டு ரயிலில் ஏறினார். சூரமங்கலம் போய் ரயில் மாறி ஈரோடு போகவேண்டும்.

காலை நேரம். தன் திருநீற்றுப் பையை எடுத்து திருஐந்தெழுத்தை ஓதி திருநீறை பூசிக்கொண்டார். திருநீறை பிறருக்குத் தரும்போதும் நாம் பூசிக் கொள்ளும் போதும் பஞ்சாட்சரம் கூறவேண்டும். அதனால் விபூதிக்கு பஞ்சாட்சரம் என்ற பெயர் அமைந்தது.

சிவாய நம என்று சொல்லி நீறணிந்தார்.

நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்ட அவரைப் பார்த்து எதிரில் இருந்த ஓர் இளைஞன் சிரித்தான். அதைப் பார்த்தும் பாராதது போல இருந்தார் வாரியார்.

இளைஞன் அவரைப் பார்த்து, ஐயா! ஏன் நெற்றிக்கு வெள்ளையடித்துக் கொள்கிறீர்? என்று கேட்டு மீண்டும் சிரித்தான்.

அவனுக்கு விளக்க, வேதத்தில் இருந்தோ, தேவாரம், திருவாசகம் திருமந்திரத்தில் இருந்தோ பாடல்களை சொன்னால் அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான் என நினைத்த சுவாமிகள், ‘தம்பி குடியிருக்கின்ற வீட்டிற்கு வெள்ளையடிப்பார்கள்; காலியான வீட்டிற்கு வெள்ளை அடிக்க மாட்டார்கள். நெற்றியில் பகுத்தறிவு குடியிருக்கின்றது என்று நான் வெள்ளையடித்துக் கொண்டேன்’ என்று ஓங்கிக் கூறினார்.

இளைஞனுக்கு அந்த பதில் ஆணி அறைந்தது போல இருந்தது. தன் நெற்றியில் அறிவு குடியிருக்கவில்லை,காலி வீடு, அதனால் வெள்ளையடிக்காதிருக்கிறோம் என்பது புலனாயிற்று.
ரயிலை விட்டு இறங்கும்போது, சுவாமி! சிறிது திருநீறு கொடுங்கள்!’ என்று கேட்டு வாங்கி திருநீறு பூசிக் கொண்டான்.

வாரியார் சொற்பொழிவில் கூட்டம் கலைவது என்பது குறைவாகவே இருக்கும். கலையும் அந்தக் குறைவான கூட்டத்தையும் தக்க வைக்கும் கலையையும் அவர் கற்றிருந்தார்.

வாரியார் ஒரு சமயம் ஒரு ஊரில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்த போது பாதியில் ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார், ”ராமாயணத்தில் அனுமனை “சொல்லின் செல்வர்” என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.”என்றார்.

போய்க் கொண்டிருந்தவர்கள் யாரைச் சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர்.

வாரியார் தொடர்ந்து, ”நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத் தான் சொல்கிறேன் .” என்றார்.

இடையில் எழுந்து சென்ற அவர்கள் மீண்டும் அவர்கள் இடத்திற்கு வந்தமர்ந்தனர்.

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்


ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம் தெரியாத உண்மை உபயோகமான தகவல்கள் !!!

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லதுவாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருதவேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்தஅழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே “டிம்’ செய்ய வேண்டும்.

* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு “இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்’ என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் “சீட் பெல்ட்’ அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளிவராது.

இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் “அப்சர்வ்’செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் “சிக்னல்’ இல்லாத இடங்களிலும், மொபைலின் “கீ லாக்’ செய்யப்பட்ட நிலையிலும், ஏன் “சிம்கார்டு’ இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள்

 நாம் வீட்டிலேயே செய்து உண்டு பயன்பெறக்கூடிய ஒரு புனித தீர்த்தம். இப்புனித தீர்த்தம் காய கற்ப சஞ்சீவியைப் போல பற்பல நோய்களை நீக்கி நல்வாழ்வு அளிக்கும் குணம் கொண்டது.

புனித தீர்த்தம்

1 - ஏலம், 2 - இலவங்கம், 3 - வால்மிளகு, 4 - ஜாதிப்பத்திரி, 5 - பச்சைக் கற்பூரம் இவைகளில் முதல் நான்கும் வகைக்கு ஒரு பங்கும், பச்சைக் கற்பூரம் கால் பங்கு சேர்க்கவும்.

முதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி இடித்து பொடித்துக்கொள்ளவும். பிறகு பச்சைக் கற்பூரத்தையும் பொடித்து இதனுடன் கலந்து கொள்ளவும். இதனை பாட்டலில் பதனம் செய்து பூஜை அறையில் வைக்கவும்.

இந்த தீர்த்தப் பொடியை திரிகடி [மூன்று விரல் அளவு] அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும்.

இதனுடன் சைவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து அருந்தலாம். வைணவ வழி பாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து அருந்தலாம்.

இருதயம், இரைப்பை பலம் பெரும்,கண்கள் பற்றிய நோய் யாவும் நீங்கும், நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும், இரத்தம் சுத்தியாகும், பித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு, மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல், மார்புவலி, மாரடைப்பு, போன்றவைகள் நீங்கும். இரத்தம் பெருகும் .

இது உடலைப் பற்றிய நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து முறையாகும். இது அனுபவத்தில் கை கண்ட அரிய முறையாகும்.

Thursday, October 16, 2014

வலி

ஏய் பல்லக்கு தூக்கி!உட்கார்ந்து உட்கார்ந்து
கால் வலிக்கிறது..
எதிர்வினை
‘கொலையும் செய்வாள் பத்தினி…
‘கொஞ்சம் இரு
முன்னதாக நீ என்ன செய்தாய்?வீடுநண்பன் சொன்னான்
வீட்டுக்குள்ளிருந்தே
விண்மீன்கள் பார்த்தானாம்…-
கூரையில் ஓட்டைகள்!
ப்பூ! இதென்ன பிரமாதம்?
என் வீட்டுக்குள்ளிருந்து
வானத்தையே பார்க்கலாம்!
கொஞ்சம் நிறுத்து…

               
  •                                          கவிஞர் : தாமரை

ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி

ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே
அவள் பழகும் விதங்களைப் பார்க்கையிலே
பல வருட பரிச்சயம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள்தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
(ஒரு ஊரில்...)

மரகத சோம்பல் முறிப்பாளே
புல்வெளி போலே சிலிர்ப்பாளே
விரல்களை ஆட்டி ஆட்டிப் பேசும்போதிலே
காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே
அவள் கன்னத்தின் குழியில்
சிறு செடிகளும் நடலாம்
அவள் கன்னத்தின் குழியில் அழகழகாய்
சிறு செடிகளும் நடலாம் விதவிதமாய்
ஏதோ ஏதோ தனித்துவம் அவளிடம் ததும்பிடும் ததும்பிடுமே
(ஒரு ஊரில்...)

மகரந்தம் தாங்கும் மலர்போலே
தனி ஒரு வாசம் அவள்மேலே
புடவையின் தேர்ந்தமடிப்பில் விசிறிவாழைகள்
தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல்காடுகள்
அவள் கடந்திடும்போது
தலை அணிச்சையாய் திரும்பும்
அவள் கடந்திடும்போது நிச்சயமாய்
தலை அணிச்சையாய் திரும்பும் அவள்புறமாய்
என்ன சொல்ல என்ன சொல்ல
இன்னும் சொல்ல மொழியினில் வழி இல்லையே
அவள் பழகும் விதங்களைப் பார்க்கையிலே
பல வருட பரிச்சயம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள்தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
முதல்முதல் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே


  • கவிஞர் : தாமரை

உனக்காகவே நான்.....


கார்மேகங்கலாய்
நீ விண்ணில் வட்டமிட்டு கொண்டிருந்தாலும்
என்றாவது ஒருநாள் மழைத்துளிகளாய்
எண்ணுடல் நனைப்பாய்யென
உனக்காகவே நான் .
...
காற்றாய் நீ
எனை கடந்து சென்ற வேளையில்
நீ இட்ட கட்டளைகள்யாவும்
உரமிட்டு வளர்கின்றது என்னை
உன்னினைவுகலாகவே

மார்கழி மாத மலரே (டிசம்பர் பூ )
நீ நித்தம் பூக்கும் மலரல்ல
ஆனாலும் உன்முகம் காண காத்திருக்கின்றேன்
உனக்காகவே நான் ......
  

உன்னினைவுகளுடன்

ஈன்ற பில்லையோன்னு 
இறந்ததையரிந்தும் 
இறக்கிவைக்க மனமின்றி 
மனம் பித்தாகி 
மரம் விட்டு மரம் 
தாவித்திரியும் மந்தியைப்போலே
உன்னினைவுகளுடன் நானும்....

Thursday, April 24, 2014

 
கார்மேகங்கலாய்
நீ விண்ணில் வட்டமிட்டு கொண்டிருந்தாலும்
என்றாவது ஒருநாள் மழைத்துளிகளாய்
எண்ணுடல் நனைப்பாய்யென
உனக்காகவே நான் .

காற்றாய் நீ
எனை கடந்து சென்ற வேளையில்
நீ இட்ட கட்டளைகள்யாவும்
உரமிட்டு வளர்கின்றது என்னை
உன்னினைவுகலாகவே

மார்கழி மாத மலரே (டிசம்பர் பூ )
நீ நித்தம் பூக்கும் மலரல்ல
ஆனாலும் உன்முகம் காண காத்திருக்கின்றேன்
உனக்காகவே நான்.....

Wednesday, April 16, 2014

தமிழ் வருடத்தின் பெயர்கள்

60 Tamil year names list

No. Name Name (English) Gregorian Year

01. பிரபவ Prabhava 1987 - 1988

02. விபவ Vibhava 1988 - 1989

03. சுக்ல Sukla 1989 - 1990

04. பிரமோதூத Pramodhoodha 1990 - 1991

05. பிரசோற்பத்தி Prachorpaththi 1991 - 1992

06. ஆங்கீரச Aangirasa 1992 - 1993

07. ஸ்ரீமுக Srimukha 1993 - 1994

08. பவ Bhava 1994 - 1995

09. யுவ Yuva 1995 - 1996

10. தாது Thaadhu 1996 - 1997

11. ஈஸ்வர Eesvara 1997 - 1998

12. வெகுதானிய Vehudhanya 1998 - 1999

13. பிரமாதி Pramathi 1999 - 2000

14. விக்கிரம Vikrama 2000 - 2001

15. விஷு Vishu 2001 - 2002

16. சித்திரபானு Chitrabaanu 2002 - 2003

17. சுபானு Subaanu 2003 - 2004

18. தாரண Thaarana 2004 - 2005

19. பார்த்திப Paarthiba 2005 - 2006

20. விய Viya 2006 - 2007

21. சர்வசித்து Sarvajith 2007 - 2008

22. சர்வதாரி Sarvadhari 2008 - 2009

23. விரோதி Virodhi 2009 - 2010

24. விக்ருதி Vikruthi 2010 - 2011

25. கர Kara 2011 - 2012

26. நந்தன Nandhana 2012 - 2013

27. விஜய Vijaya 2013 - 2014

28. ஜய Jaya 2014 - 2015

29. மன்மத Manmatha 2015 - 2016

30. துன்முகி Dhunmuki 2016 - 2017

31. ஹேவிளம்பி Hevilambi 2017 - 2018

32. விளம்பி Vilambi 2018 - 2019

33. விகாரி Vikari 2019 - 2020

34. சார்வரி Sarvari 2020 - 2021

35. பிலவ Plava 2021 - 2022

36. சுபகிருது Subakrith 2022 - 2023

37. சோபகிருது Sobakrith 2023 - 2024

38. குரோதி Krodhi 2024 - 2025

39. விசுவாசுவ Visuvaasuva 2025 - 2026

40. பரபாவ Parabhaava 2026 - 2027

41. பிலவங்க Plavanga 2027 - 2028

42. கீலக Keelaka 2028 - 2029

43. சௌமிய Saumya 2029 - 2030

44. சாதாரண Sadharana 2030 - 2031

45. விரோதகிருது Virodhikrithu 2031 - 2032

46. பரிதாபி Paridhaabi 2032 - 2033

47. பிரமாதீச Pramaadhisa 2033 - 2034

48. ஆனந்த Aanandha 2034 - 2035

49. ராட்சச Rakshasa 2035 - 2036

50. நள Nala 2036 - 2037

51. பிங்கள Pingala 2037 - 2038

52. காளயுக்தி Kalayukthi 2038 - 2039

53. சித்தார்த்தி Siddharthi 2039 - 2040

54. ரௌத்திரி Raudhri 2040 - 2041

55. துன்மதி Thunmathi 2041 - 2042

56. துந்துபி Dhundubhi 2042 - 2043

57. ருத்ரோத்காரி Rudhrodhgaari 2043 - 2044

58. ரக்தாட்சி Raktakshi 2044 - 2045

59. குரோதன Krodhana 2045 - 2046

60. அட்சய Akshaya 2046 - 2047

Friday, April 04, 2014

கனவென்னும் கலைப்படைப்பின் விசித்திரம்...

ஒவ்வொரு நாளிரவிலும்
எவ்வழி வந்தன 
எவ்வழி சென்றன
வெனயோசிப்பதற்கும் 
நேரமின்றி தான்விடிகிறது 
ஒவ்வொரு விடியலும்...
கறுப்பு வெள்ளையாகவோ
பல வண்ணங்களிலோ
குட்டிக் குட்டிக் 

குறும்படங்களாக
திரையிட்டுக் காட்டப்பட்டும்
கைதட்டி ரசிகக்வோ
சொல்லி விமர்சிக்கவோ 

கூடஆர்வம் எழுந்ததில்லை...
என்றாவதொருநாள் 

நள்ளிரவில்
பாம்பாகி துரத்தி 
கொத்தும்போதோ
கொத்துக்கொத்தாய் 
மாங்காய் பறிக்கையிலே
அந்த ஒற்றை மாமரம்
சட்டென சிறகசைத்து 

விண்ணில் பறக்க
கைநழுவி 

பொத்தென விழும்போது
சட்டென தூக்கம் தொலைத்து

விழிக்கையில்
கொஞ்சமேனும் உணரப்படுகிறது
கனவென்னும் 

கலைப்படைப்பின் விசித்திரம்...

கௌதமன்  கரிசல்குலத்தான்

Saturday, March 08, 2014

பொதுஅறிவு

நேபாளத்தின்
தேசியக்கொடி முக்கோண
வடிவிலிருக்கும்...

ஆல்பிரட் நோபல்
( நோபல் பரிசுகள் இவர்பெயரால்
கொடுக்கப்படுகின்றன)

1866 ஆம் ஆண்டு டைனமைட்டை
கண்டுபிடித்தார்...

கொசு நம்மைத்தேடி
வரும்போது விநாடிக்கு 250
முதல் 600 தடவைகள் வரை
அதன் சிறகுகளை அடித்துக்
கொள்ளும்...

சராசரியாக 6 விநாடிகளுக்கு
ஒருமுறை நாம் கண்களை
இமைக்கிறோம்...

பொதுஅறிவு

நிறமில்லாத ரத்தத்தைக்
கொண்ட பூச்சியினம்

" கரப்பான் "பூச்சி

பிளாஸ்டிக் உடைவதற்கு
500 ஆண்டுகள் ஆகின்றன...

கொட்டாவி விடும்
போது நாக்கை தொட்டால்
கொட்டாவி நின்று விடும்...

மனித நாக்கில் உள்ள சுவை
அரும்புகளின் சராசரி வாழ்நாள்
08 முதல் 10நாட்கள் மட்டுமே...

இந்தியவின் மிகப்பெரிய
மாநிலம்

" உத்திரபிரதேசம் "

ஒரு தக்காளி, 15 லிட்டர்
தண்ணீரை உறிஞ்சுகிறது..

இந்த " உறிநீர்' அளவு
( வெர்ச்சுவல் வாட்டர் )
எல்லாவற்றுக்கும் பொருந்தும்...

பொது அறிவு

உலகில் மிக பழமையான
பாராளுமன்றம் உள்ள நாடு..
" ஐஸ்லாந்து "

மரங்கொத்தி பறவையால்
மரத்தை ஒரு நொடியில் 20
முறை தொடர்ந்து கொத்த
முடியும்...

கரப்பான் பூச்சி 35
கோடி ஆண்டுகளாக வடிவம்
மாறவில்லையாம்...

பல்வேறு இசைக்கருவி
புத்தளிப்புக் கருவிகளை
ஒன்றாக வாசித்தல்...
" பல்லியம் "

பழைய பெயர் இன்றும் அன்றும்...
மதுரை – மாதுரையும் பேரூர்...
உலகில் எவனுக்கும் கடன்
படாத நாடு..
" லிபியா "

Tuesday, February 25, 2014

இந்திய ரகசியங்கள் !

1.இந்தியாவில் மிகப்பெரிய பால் பண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ளது.

2,இந்தியாவில் முதன்முதலில் காப்பிச் செடி சிக்மகளூர் என்ற இடத்தில் பயிரிடப்பட்டது.

3.இந்தியாவின் தேசிய விலங்கு புலி, பறவை மயில்.

4.இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக்கோட்டின் பெயர் ரெட்கிளிப்.

5.இந்தியாவின் முதல் வங்கி பிரசிடென்ட் வங்கி.

6.இந்தியாவிற்குள் நுழைந்த முதல் ஐரோப்பியர் அலெக்சாண்டர்.

7.1911ஆ‌ம் ஆ‌ண்‌டி‌ல் இரு‌ந்துதா‌ன் புதுடெ‌ல்‌லி இ‌ந்‌தியா‌வி‌ன் தலைநக‌ராக செய‌ல்ப‌ட்டு வரு‌கிறது.

8.இ‌ந்‌திய தே‌சிய‌க் கொடியை வடிவமை‌த்தவ‌ர் சுரே‌ந்‌திரநா‌த் பான‌ர்‌ஜி ஆ‌ண்டு 1906.

9.இ‌ந்‌தியா‌வி‌ல் ர‌யி‌ல் போ‌க்குவர‌த்து இ‌ல்லாத மா‌நில‌ம் மேகாலயா.

10.இ‌ந்‌திய வான சா‌ஸ்‌திர‌த்‌தி‌ன் த‌ந்தை என அழை‌க்க‌ப்ப‌ட்டவ‌ர் ஆ‌ரியப‌ட்ட‌ர்.

11.இ‌ந்‌தியா‌வி‌ன் நறுமண‌த் தோ‌ட்ட‌ம் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌ம் மா‌நில‌ம் கேரள‌ம். இ‌ங்கு வாசனை‌ப் பொரு‌ட்க‌ள் அ‌திக‌ம் ப‌யிர‌ட‌ப்படு‌ம்.

12.இ‌ந்‌தியா‌வி‌ன் முத‌ல் பேசு‌ம் பட‌ம் இ‌ந்‌தி‌யி‌ல் 1931ஆ‌ம் ஆ‌ண்டு வெ‌ளியானது. பட‌த்‌தி‌ன் பெய‌ர் ஆல‌ம் ஆரா

அறிய வேண்டிய தகவல்கள்!

 1)பிறக்கும்போது மனித உடலில் 300 எலும்புகள் உள்ளனவாம்;வளர்ந்த பின் 206 தான் உள்ளனவாம்!(94 ஐ யாரோ திருடிட்டுப் போயிட்டாங்க போல)

2)மனித இதயம் ஒரு நாளைக்கு 1,00,000 தடவைக்கு மேல் துடிக்கிறதாம்

3)தலை வெட்டுப்பட்டாலும் ஒரு கரப்பு பல நாட்கள் வாழுமாம்;கடைசியில் அது பட்டினியால் சாகிறதாம்!

4)பூமியின் எடை-6,600,000,000,000,000,000,000 டன்களாம்.

5)ஒரு சதுரக் காகித்த்தை ஏழு தடவைக்கு மேல் பாதியாக மடிக்க முடியாதாம்,

6)கிளினோஃபோபியா என்பது படுக்கையைக் கண்டு பயப்படுவதாம்

7)ஒரு வயலினில் கிட்டத்தட்ட 70 மரத்துண்டுகள் உள்ளனவாம்

8)மின்னலால் உண்டாகும் சூடு,சூரியனின் பரப்பில் உள்ள சூட்டை விட 5 மடங்கு அதிகமாம்.

9)சமாதானத்துக்கான நோபல் பரிசு மெடலில் தோள் மேல் கை போட்டு நிற்கும் மூன்று நிர்வாண ஆண்களின் உருவம் உள்ளதாம்

10)உலகில் மிக அதிகமாக உள்ள பெயர் முகமது என்பதுதானாம்

11)சீட்டுக் கட்டில் ஆட்டின் ராஜாவுக்கு மட்டும் மீசை இல்லையாம்.

12)மின்சார பல்ப் கண்டு பிடித்த எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயமாம்

13)உலகில் 10 லட்சம் விதமான மிருகங்கள் உள்ளனவாம்

14)ஒரு சராசரி மனிதன் ஒரு ஆண்டில் 1460க்கும் மேற்பட்ட கனவுகள் காண்கிறானாம்.

15)முள்ளம்பன்றிகள் தண்ணீரில் மிதக்குமாம்.

16)சூரியன் ,பூமியை விட 330330 மடங்கு பெரியதாம்.

17)காட்டுத்தீ,மலையில் கீழ் நோக்கிப் பரவுவதை விட,மேல் நோக்கி வேகமாகப் பரவுமாம்.

18) ஒரு 75 வயது மனிதன் வாழ்வில் 23 ஆண்டுகள் தூங்கியிருப்பானாம்!

18+1))ஆக்டோபஸ்ஸுக்கு 3 இதயங்கள் உள்ளனவாம்

Monday, February 17, 2014

ஆய கலைகள் 64

1. எழுத்திலக்கணம்(அக்கரவிலக்கணம்)
2. எழுத்தாற்றல் (லிகிதம்)
3. கணிதம்
4. மறைநூல் (வேதம்)
5. தொன்மம் (புராணம்)
6. இலக்கணம் (வியாகரணம்)
7. நயனூல் (நீதி சாத்திரம்)
8. கணியம் (சோதிட சாத்திரம்)
9. அறநூல் (தரும சாத்திரம்)
10. ஓகநூல் (யோக சாத்திரம்)
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)
12. நிமித்திக நூல் (சகுனசாத்திரம்)
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)
14. மருத்துவ நூல் ( வைத்தியசாத்திரம்)
15. உறுப்பமைவு நூல் (உருவசாத்திரம்)
16. மறவனப்பு (இதிகாசம்)
17. வனப்பு
18. அணிநூல் (அலங்காரம்)
19. மதுரமொழிவு (மதுரபாடணம்)
20. நாடகம்
21. நடம்
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப்பிரமம்)
23. யாழ் (வீணை)
24. குழல்
25. மதங்கம் (மிருதங்கம்)
26. தாளம்
27. விற்பயிற்சி (அத்திரவித்தை)
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)
30. யானையேற்றம் (கச பரீட்சை)
31. குதிரையேற்றம் (அசுவபரீட்சை)
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)
33. நிலத்து நூல்/மண்ணியல்(பூமி பரீட்சை)
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
35. மல்லம் (மல்ல யுத்தம்)
36. கவர்ச்சி (ஆகருடணம்)
37. ஓட்டுகை (உச்சாடணம்)
38. நட்புப்பிரிப்பு (வித்துவேடணம்)
39. காமநூல் (மதன சாத்திரம்)
40. மயக்குநூல் (மோகனம்)
41. வசியம் (வசீகரணம்)
42. இதளியம் (ரசவாதம்)
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவவாதம்)
44. பிறவுயிர்மொழியறிகை (பைபீல வாதம்)
45. மகிழுறுத்தம் (கவுத்துகவாதம்)
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)
47. கலுழம் (காருடம்)
48. இழப்பறிகை (நட்டம்)
49. மறைத்ததையறிதல் (முஷ்டி)
50. வான்புகவு (ஆகாயப்பிரவேசம்)
51. வான்செலவு (ஆகாய கமனம்)
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல்(பரகாயப் பிரவேசம்)
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
54. மாயச்செய்கை (இந்திரசாலம்)
55. பெருமாயச்செய்கை(மகேந்திரசாலம்)
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
62.புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
64. சூனியம் (அவத்தைப்பிரயோகம்) -

Tuesday, February 04, 2014

பழைய பார்வைகள்

கரங்கள் பற்றி
கடைசியாய் எச்சில் படுத்தாமல்
முத்தமிட்டு கரைந்தபடி
விடைபெற்ற நாளில்
கலைந்து போனதா
உன் விழிகளில் வாழ்ந்த
காதல் மூலாம் ?

இப்போது எதிர்படுகையில்
தென்படுவதில்லை
பழைய பார்வைகள் '
திருவிழா முடிந்த ஆலய வளாகமாய்
சோபை இழந்து கிடக்கிறது கண்கள்

சோகம் சோடித்தமுகத்தொடு
உன்னை காண்கையில் எல்லாம்
கொழு அறுத்த புழுவாய் துடிக்கிறேன்

செவ்விந்திய இனம்போல
உன் சிரிப்பு அழிந்தே போனதடி

நீ இல்லாத தோல்வியை
புன்னகை வேசம் அணிந்தே ஊருக்கு
சரமாரியாய் சமாளிக்கிறேன்

ஒருவார்த்தை பேசமாட்டாயா ?
என துடித்தாலும்
உன் சந்தேக புருஷன் பற்றி
அறிந்திருப்பதால்
அந்த சலனமான ஆசையை நிறுத்தி விடுகிறேன் ...

ஒருநாள்
என்னை கடந்த ஒரு நொடியில்
என் பெயர் சொல்லி அழைத்தாய் .
பட்டாம் பூச்சிகள் இதயத்தில்
சிறகடிக்க திரும்பி பார்த்தேன் .

நடை பாதை விட்டு
வீதிக்கு ஓடிய உன்
கடைசி பிள்ளையை துரத்தி
பிடித்தபடி நீ என்னை கவனிக்க வில்லை ...

உன் இறுதி வரைக்கும்
என் பெயரை உச்சரிக்க வேண்டும்
என்ற ஆசையில்
உன் பிள்ளைக்கு என் பெயரை சூட்டி இருக்கிறாய்
என்பதை நான் அவதானித்தேன் ...

நானும் வேற்றூர் போக தீர்மானம் செய்திருக்கிறேன் ...
என்னை உன் கண்களில் வீழ்த்துவதால் தானே
இன்னும் உன் காயங்கள் ரணமாகின்றன
அதற்காகவே ...

வாகை காட்டான்