Wednesday, September 25, 2013

வேகத்தடைகள்

எங்கிருந்து தான் வருமோ
அத்தனை வேகத்தடைகள்
நீயும் நானும் பேசிக்கொண்டு
இருக்கையில்

எப்போதும் பேசவே பேசாத
ஒருவன் அவசரம் யென்று
அலைப்பேசியில் அழைத்து
அடம்பிடித்து பேசிக்கொண்டே
இருக்கிறான்

பிறகு பேசுகிறேன் என்று
முடித்து உன் பக்கம்
திரும்புகையில் எவனோ
ஒருவன் வழிமறந்தவன்
நம்மிடையே உள்புகுந்து
முகவரி விசாரிக்கிறான்

தப்பு தப்பாக வழிச்சொல்லி
அவசரமாக அவனை
வழியனுப்பி விட்டு
மீண்டும் உன்னிடத்தில்
பேச ஆரம்பிக்கும் போது
சவாரிக்கு ஆள் பிடிக்கும்
ஆட்டோகாரன் ஒருவன்
சார் ஆட்டோ என்னும் போது
எனக்குள் ஏற்படும் எரிச்சலைக்
கண்டே சிரித்தே விடுகிறாய்

திரும்பவும் ஏதோ பேசிக்கொண்டு
இருந்தோமே என்று நான்
ஆரம்பிக்கையில் மொத்த பூக்களையும் உனக்காகவே
கட்டி எடுத்து வந்த மாதிரி
பூக்காரி ஒருத்தி நம்முன்
வந்து நின்றாள்

அவசரத்தில் பேரமே பேசாமல்
கொள்முதல் செய்து அவளையும்
வழியனுப்பி மீண்டும் உன்னுடன்
பேச தொடங்குகையில் நீ
சொன்ன வார்த்தையில்
எனக்கும் தான் பேச்சு
வரவே இல்லை

அந்த ஐஸ்கிரிம்காரனை
என்னை ஏன் கூப்பிட

சொன்னாய்!!!!!

வெங்கடேசன்  பாலகிருஷ்ணன் 
வேட்டவலம் 

No comments: