Wednesday, November 27, 2013

வந்து நீயும் சேர்ந்து விடு

ஆத்து தண்ணீ ஊத்து தண்ணீ

அத்தனையும் வத்திருச்சே_

ஆனா நா வடிக்கும்

கண்ணீரு வத்தலையே.....


சொத்து சுகம் கேக்கலியே

சோறு தண்ணீ கேக்கலியே _

உன் ஒத்த‌ சொல்லு

கேட்டிடவும் கூடுலியே......


ஊர‌ நா நம்புலியே

என் உள்ளத்தையும் நம்புலியே

உன்னை தானே நம்பினேனே

உள்ளுக்குள்ளே இப்ப‌ வெம்பினேனே.......


மண்ணுலையும் ஆசையில்லை அட‌

பொன்னுலயும் ஆசையில்லை

உன் ஆசைமுகம் பாத்திடத்தான்

ஆயுசுக்கும் ஆசைப்பட்டேன்.....


கண்ணுதான் பட்டுருச்சோ

கால நேரம் கெட்டிருச்சோ

உன் பொன்னு மனம் வாடிப்போக‌

நா பொலம்பி தவிக்கிறனே......


பொங்கி வச்ச‌ சோறும்

புடிச்சு வச்ச‌ நீரும்

என் தொண்டை நனைக்கிலியே

என்வயித்துக்கும் இப்போ பசிக்கலியே.......


ஆருனா ஆரிடுமா

அத்தனையும் மாறிடுமா?.....

யாரோ சொல்லிருந்தா

ஆருதலா நீயிருப்ப‌.....

நீயே சொன்னதால‌

நாதியத்து நானிருக்கேன்.....


வேலை செய்ய‌ தோணிலியே

வேதனையை சொல்லிடவும் ஆளில்லையே _

மனம் புழுங்கி சாகுறனே

புத்தியின்றி வாடுரனே.......


மாலக் கருக்கலிலும்

அந்த‌ மையிருட்டுவேளையிலும்

பேசிக் களித்த‌ கதை

என் நெஞ்சுகுழி பொசுக்குதடா.....


உறவா நீயிருந்தா உதறி விட்டிருப்பேன்....

உசுரா நீயிருக்க உன்ன‌ விட்டுபுட்டு

எப்படி நான் வாழ்ந்திடுவேன்?.........


அட‌ சாட்சி தேவையில்லை

நீ தந்த‌ சத்தியமும் மெய்யிலையோ...

பாலும் திரிஞ்சிருச்சோ

உன் பாசமும் மாறிடுச்சோ.....


உசுர‌ உருக்கி நா

என் உள்மனச‌ சொல்லிபுட்ட

காலம் கடத்தாத‌...

என் கனவை கலைக்காத....


ஓடி நீ வந்து விடு

ஒத்த‌ சொல்லு பேசிவிடு

வாடி நா நிக்கிறனே

வந்து நீயும் சேர்ந்து விடு......


காலந்தான் மாறிடுமா _உன்

கனிவு மொழி கேட்டிடவும்....

நேரம் தான் விடிஞ்சிருமா _உன்

நேச‌ முகம் பாத்திடத்தான்......

No comments: