Monday, January 20, 2014

இன்னமுதப் பொங்கலிடு!!!

வரப்புயர !
நீர் உயர.....
நீர் உயர!
நெல் உயர...
நெல் உயர!
குடி உயர......
உழவர் குடி உயர!!

செந்நெல் விதை போட்டு,
நாற்று நட்டு,
பயிர் வளர்த்து,
கதிர் அறுத்து,
புதுப்பானை அடுப்பேற்றி....
இஞ்சியொடு மஞ்சளும்....
வளைத்துக்கட்டி,
முக்கனியும் நறுந்தேனும்...
நயமுடனே படைத்தும்....
இங்கே ..

செங்கதிரோனின்
செய் நன்றி தனை நினைந்து...
இன்னமுதப்
பொங்கல் இடும் நாள் பொழுதில்...
எத்திக்கும் வாழும்....
ஏர் உழு உழவர்தம்
குலம் வாழ....
பார் எங்கும் வாழ்..
தமிழர் நாமும் வாழ்த்து
சொல்வோம்.

தைத்திரு நாள் நல்வாழ்த்து !!!!
வாழ்க நலவாழ்வு !!!!
 

 பாரதி கண்ணம்மா

No comments: