Monday, January 20, 2014

பொங்கல் நல்வாழ்த்து!

தமிழனுக்கும் ஒரு நாளாம்
தரணியிலே சிறந்த நாளாம்

ஏட்டுக் கல்வி படிச்சிபுட்டும்
ஏர் ஓட்டும் சின்ன ராசா..

ஒஞ்சி போற வயசுலயும்
ஓயாமா வெதைக்கிற என் செல்ல ஆத்தா..

மாராப்பு இடுப்புல சொருகி
வயக்காட்டு வெயிலுல வெளுத்த அக்கா

அத்தனை ஒறவுக்கும் நன்றி சொல்ல
வந்தோமைய்யா..

பொங்குற பானை போல
வாழ்க்கையும் தான் பொங்கனுமையா..

ஏழேழு தலைமுறைக்கும் சோறு போட
நீங்க வாழனும்மைய்யா...

சாமியத்தான் கும்பிட்டிட்டு வாழ்த்து சொல்ல
வந்தேனய்யா.....
 
கவிதாயினி சத்யா

No comments: