Friday, April 04, 2014

கனவென்னும் கலைப்படைப்பின் விசித்திரம்...

ஒவ்வொரு நாளிரவிலும்
எவ்வழி வந்தன 
எவ்வழி சென்றன
வெனயோசிப்பதற்கும் 
நேரமின்றி தான்விடிகிறது 
ஒவ்வொரு விடியலும்...
கறுப்பு வெள்ளையாகவோ
பல வண்ணங்களிலோ
குட்டிக் குட்டிக் 

குறும்படங்களாக
திரையிட்டுக் காட்டப்பட்டும்
கைதட்டி ரசிகக்வோ
சொல்லி விமர்சிக்கவோ 

கூடஆர்வம் எழுந்ததில்லை...
என்றாவதொருநாள் 

நள்ளிரவில்
பாம்பாகி துரத்தி 
கொத்தும்போதோ
கொத்துக்கொத்தாய் 
மாங்காய் பறிக்கையிலே
அந்த ஒற்றை மாமரம்
சட்டென சிறகசைத்து 

விண்ணில் பறக்க
கைநழுவி 

பொத்தென விழும்போது
சட்டென தூக்கம் தொலைத்து

விழிக்கையில்
கொஞ்சமேனும் உணரப்படுகிறது
கனவென்னும் 

கலைப்படைப்பின் விசித்திரம்...

கௌதமன்  கரிசல்குலத்தான்

No comments: