Monday, September 23, 2013

பெண்

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் 
பிறருக்காய் அளித்து வாழும் ஓர் இனம் 

பிறப்பில் பால் வேறுபாடு தெரிதலில்லை 
வளர்ப்பில் அதைத் தவிர வேறு கற்பித்தலில்லை 

மகளாய் பணிந்து பல வருடங்கள்
அக்காளாய் ,தங்கையாய் பல விட்டுக் கொடுத்தல்கள்
மகனாகவும் சில கடமைகள்

தொடர்புகள் அற்ற தொடர்புகளாய் கடமைகள்
சோர்வின்றி தொடர
மஞ்சள் நாண் பிணைத்து ,மனைவி என 
புதுப் பெயரும் சூட்டி 
கரை காணா கடல் என கண்முன்னே 
விரியும் புதுக்கடமைகள்

அன்னையாய் அன்னமிடல் முதல்
தோழியாய் குறைகள் தீர்த்து
ஆசானாய் அறிவு புகட்டி
உடன் பிறந்தவளாய் அனுபவங்கள் சொல்லி
காலை முதல் மாலைவரை 
என்ன ஒரு வேகம் 
அவள் செயலிலும் எண்ணங்களிலும்

எல்லோருக்கும் எல்லா நேரங்களையும்
பகிர்ந்தளித்து விட்டால் அவளுக்கான
நேரம் எது ஏது?

அவளுக்கான கடமைகளை செய்யவும் 
அவளின் குறைகளை பகிரவும்
சந்தோசங்களை சிலாகிக்கவும்
அவள் அறிவை உணரவும் உணர்த்தவும்
உருவேற்றவும்
இன்னும்...........................?
எல்லாம் ஒரு பதில்கள் அற்ற கேள்விக்குறிகளோடு 
முற்றுப் பெறுகிறது வெகு முன்காலம் முதல்!!!!

பெண்ணை தெய்வமாய் ,அன்னையின் அழகாய் 
பார்க்கும் சில கோடி உயிர்கள்
பழிகாரியாய், துரோகியாய் ,போதை தரும் பேதையாய் 
பார்க்கும் பல கோடான கோடி உயிர்கள்
பெண்ணையும் உணர்வும் , உயிரும் உள்ள 
சக மனுசியாய் பார்க்கும் கண்களையும் உள்ளத்தையும் 
காண முடிந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும்

யோகநந்தினி)
ஈரோடு 

No comments: