Monday, December 16, 2013

அனைத்துமாய் அவள் என்னுள்ளே


எங்கும் நிறைந்தவன்
இறைவன் ஒருவனே என்பார்கள்

எனது உலகின்  
எலாவிடத்திலும் நிறைந்திருப்பது
நீதான் பெண்ணே

எப்படி என்று கேட்கிறாயா
இதோ சொல்கிறேன் கேளடி ....

யாருமில்லா தனி அறையில்
ஏதேனும் ஓரிடத்தில் மோதிவிட்டு
உன்னிடத்தில் மன்னிப்பு கேட்டு
தலை சொரிகிறேன்
நீயோ
வலி நிவாரணம் ஒன்றை
என் நெற்றியில் தெய்கின்றாய்

கல்லூரி பாடப்புத்தகத்தில்
புரட்டிய பக்கமெல்லாம்
எனது நினைவலைகளில்
பதிந்துள்ளனவா என
ஒத்திகை பார்க்கையில்
நான் சொல்வது தவறென்று
என் தலையில் கொட்டுகின்றாய்

அதிகாலை கதிரவன்
என் வீட்டு ஜன்னலின் வழியே
நேரம் அறியாமல் உறங்கும்
எனை எழுப்ப முயல்கிறான்
முடியாமல் போகவே
நீயும் வருகிறாய் ....
போர் வீரனாய்
உனது முயற்சியும்
தோல்வியை தழுவிட
ஒரு குவளை நீரில்
என் தூக்கம் கலையச் செயகிறாய் .

எப்பொழுதும் எனைபிரியாமல்
என்னவளாய் நீ வேண்டுமென
இறைவனை வேண்டுகையில்
இடையினில் தோன்றி
இல்லாத ஒன்றாய்
இறைவனிடம் கேள் என்கின்றாய்

எனது அலைபேசி
வெகுநேரம்
சிணுங்கி கொண்டிருந்தும்
தொடர்பு கொள்ளாமல் விட்டதைஎன்னி
வீடு சென்றவுடன்
அன்னையவள் திட்டினால்,  
மழலை மொழியில்
நீ சொல்லும் கதைகள் கேட்பதற்கென
எனது அறை கதவுகளை போலவே
எனது காதுகளுக்கும்
தாழிட்டுவிட்டேன் என்பது
பாவம்
என் அன்னையவளுக்கு
எப்படிதெரியும்.

விடுமுறை நாட்களில்
விரல்நகம் பற்றிக்கொண்டு
வீதியெங்கும்
உலாவருகின்றாய்
என்னுடன்
நிகழ்வுகளை ரசித்தவாரே ....

மனித சாதியில்
மாலாத்துயரமேன்பது
ஒருவரின்
மரணம் தான் என்பார்கள் ,
அதைவிட கொடிது பெண்ணே
உனது பிரிவு

அவ்வப்போது
சில வினடிப்பொலுதுகலில்
நீ எனை விட்டு
பிரிந்து சென்றதை எண்ணி
அழுதுகொண்டே முடங்கிக்கிடப்பேன்
ஓர் மூலையில்
முடவனைப்போல் .....

அந்த நொடிப்போளுதுகளிலும்
என் கண்ணீர் துடைத்து
எனை தேற்றுவாய் பெண்ணே ........

இப்படித்தான்
அவள் என்னுடன்
நிறைந்து நிற்கிறாள் ..............
அனைத்துமாய் .

வெ. பழமுதிர் கண்ணன்   (F...K....)

No comments: