Monday, December 16, 2013

துணை நிற்பாய் ஈசனே !


"பா"க்கள் பல்லாயிரம்
பைந்தமிழில் நான்
பாடுவேன் எம் ஈசனே !
அண்டத்தில்
பிண்டமாய் திக்கற்று
திசை அறியாமல்
சுற்றியவன் நானே !
என் சுயமறிய செய்தவன்
நீதானே பரமனே !
அமுதும் நஞ்சும்
வேறல்ல உனக்கு;
இம்மையும் மறுமையும்
மாற்றல்ல எனக்கு;
உயிரினங்கள் அன்பில்
உயிர்ப்புற்று;
சீவன்கள் செழிப்புற்று
வாழ்ந்திட;
நித்தமும் துணை
நிற்பாயே !

No comments: