Monday, December 16, 2013

தமிழர் எம் தாகம்


விம்மல்களைஅடக்கி கொண்டு
விளக்கேற்றும் திருநாள்...

செம்மல்களே உங்களுக்காய்
தீபமேற்றும் பெருநாள்...

காவல் தெய்வங்களே..!
கல்லறை மனிதர்களே..!
உங்களை எண்ணாமல்
நொடிகள் கடந்ததில்லை...

உறங்கி ஒருகணமும்
உம் நினைவுகள் கிடந்ததில்லை...
கனவுகள் சுமந்து
காவல் செய்த வீரர்களே...

இளமையின் ஆசை வாசல்களை
எல்லாம் மூடி முடக்கிவிட்டு
இனத்தின் சுதந்திரத்துக்காய்
இன்னுயிர் ஈந்த தியாகிகளே...

ஈழ குழந்தைகளே..!
எங்கள் உறவுகளே..!
என்றும் எம் நினைவில் இருந்து
விலகாத தேச புதல்வர்களே...

நீர் சிந்தும் கண்களும்
நெருப்பு ஏந்திய நெஞ்சுமாய்
உங்கள் முன் நின்று தொழுகின்றோம்...
உங்கள் கனவுகள் மெய்ப்பட...

உங்கள் கனவுகள் தாகமாய்
நம் நெஞ்சில் வாழ்கிறது...
காலத்தை எதிர்பார்த்து
கடமை செய்ய விளைகிறது...

விடியும் ஒருநாள்
உங்கள் ஈழம்...
முடியும் ஒருநாள்
உங்கள் இனத்தின் சோகம்...

உங்கள் முகம் காட்டி
மீண்டும் உறங்குங்கள்...
தமிழீழ தனியரசை
உங்கள் பாதங்களில்

காணிக்கை ஆக்குகின்ற
காலம் மிக விரைவில்
உங்கள் கனவு......

வாகை காட்டு கவிஞன்

No comments: